Wednesday, July 19, 2006

சிங்கார சிட்னி...

ஒரு மாசத்துக்கு அப்புறம் இன்னைக்குத் தான் புதுப் பதிவு போடுதேன். வேல விசயமா சிட்னிக்கு வந்து இன்னையோட ஒரு மாசம் ஆச்சு. இப்ப தான் நேரம் கிடைச்சுது. நிலவு நண்பனோட கல்யாணத்துக்குப் போக முடியல, டுபுக்கு அண்ணாச்சியோட நெல்லை மாநாட்டுக்குப் போக முடியாது.
என்ன செய்ய, கடமை என் கையப் புடிச்சு இழுக்குதே...

ஆஸ்திரேலியாவில இப்ப பனிக்காலம். செப்டம்பர் மாசம் வேனிற் காலம் ஆரம்பிக்குமாம். டிசம்பர்ல கோடை காலமாம். ஆச்சரியமான தட்பவெட்ப நிலை.

வழக்கம் போல சிட்னிலயும் நம்ம ஊரு பயக்க நெறய பேரு இருக்காங்க. ரெண்டு தனியார் தமிழ் FM வானொலி இருக்கு. இதெயெல்லாம் விட ரொம்ப அருமயான ஒரு முருகன் கோயில் இருக்கு. வெள்ளிக்கிழம ஆனா நம்ம தமிழ் ஆளுக எல்லாம் ஒன்னு கூடி கோயில்ல சாமி கும்பிடுதாங்க. முழுக்க முழுக்க தமிழ் பாட்டுகள பாடுதாக. குலமிகு கரியது, திருப்புகழ், அம்மையே அப்பா ஒப்பிலா மணியே, ஏறுமயில் ஏறி - இந்த பாட்டுகளயெல்லாம் ஒரு அயல் நாட்டுல கேக்குதப்போ அப்டி புல்லரிக்குது.

இந்த கோயிலக் கட்டினது இலங்கைத் தமிழர்கள். அவுகளுக்கு என் வந்தனம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடான்னு கத்தனும் போல இருந்தது. சிங்கப்பூருல ஆட்சி மொழி, இலங்கை, மலேசியா, அந்தமான்னு எல்லா ஊருலயும் நம்ம கொடி பறக்குதத ஒரு கனம் மனசு நெனச்சுப் பாத்தது.

அப்புறம் அந்த கோயில்ல பூச முடிஞ்சதும் நம்ம தமிழ் சாப்பாடு கெடைக்கும். இட்லி, வடை, முருங்கக்கா சாம்பார்னு பட்டயக் கெளப்பிட்டானுவ.

இனிமேல பதிவு போட நேரம் கெடைக்குமுன்னு நெனைக்கேன். அப்பப்போ சிங்கார சிட்னியப் பத்தியும் கொஞ்சம் சொல்லுதேன்....