Friday, June 09, 2006

முல்லா குல்லா... பாகம் 4

முல்லா இப்படி கீத்தா மேல ஒரே லவ்வா இருக்க, அவன ரெண்டு மூனு பிள்ளேள் லுக்கு விட்டுதுக. ரெண்டு மூனு பொண்ணுகளா அப்போ முல்லா சாஹேப் பெரிய மன்மதக் குஞ்சா இருப்பானோன்னு நினக்காதிய. அவனப் பார்வையால பந்தாடுன பரதேவதைகள் எல்லாம் நடிக கமலா காமேஷ், தேனி குஞ்சரம்மா ரேஞ்சுல இருக்கும். வழக்கமா பயக்க தான் பிள்ளேள் எப்ப வெளில வருமுன்னு அதுக வீட்டு வாசல்ல காவக் கெடப்பானுவ. ஆனா முல்லாவப் பாக்கதுக்கு அவன் எயித்த வீட்டுப் பிள்ளேள் தங்கம்மா, மங்கம்மா ரெண்டு பேரும் அவுக வீட்டு கட்டமன்னுச் சுவர புடிச்சிகிட்டு காத்து கெடப்பாளுக. முல்லா வீட்ட விட்டு வெளில காலடி எடுத்து வச்சதும் அவன உஷ், உஷ்னு மெதுவா கூப்புடும் ரெண்டு பிள்ளேளும். ஆனா கீத்தா நெனப்புலயே திரியுத முல்லா இதுகள மறந்தும் திரும்பிப் பாக்க மாட்டான்.

அதுகளும் மனந்தளராம "ஏய், ஹலோ, எலே சோத்துமாடா" அப்டின்னு என்னல்லாமோ சத்தம் குடுத்து பாத்ததுக. நம்ம பய மசியவே இல்ல. இப்படி ரொம்ப தெனாவெட்டா திரிஞ்ச முல்லாவ எப்படியாவது நம்ம பக்கம் திரும்ப வக்கனும்னு சபதம் போட்ட மங்கம்மா, தங்கம்மா ரெண்டு பேரும் ஒரு நாள் முல்லா வீட்டு நடய விட்டு எறங்குனதும், வரிசயா அவன் தட்டட்டி மண்ட மேல பக்கத்துல இருந்த பப்பாளி மரத்துல இருந்து பப்பாளிக் காய பறிச்சி எறிய ஆரம்பிச்சாளுக. ஆனா அதுக்கும் நம்ம ஆளு கொஞ்சங்கூட அசரல. வந்த பப்பாளிக் காயெல்லாம் அவன் தலயில பட்டு சிதறி ஒடஞ்சதே தவிர நம்ம பயலுக்கு ஒன்னும் ஆவல.

இதயெல்லாம் பாத்துகிட்டு இருந்த முல்லாவோட சேக்காளி மாசானம், சவ்வு முட்டாய், அழிரப்பர், அருனாக்கயிறு இதயெல்லாம் அதுகளோட தம்பி ஊசிக்காட்டானுக்கு வாங்கிக் கொடுத்து எப்பிடியோ அந்த பிள்ளேள் ரெண்டு பேரயும் பிக்கப் பண்ணிட்டான். மாசானம் இப்ப அந்த பிள்ளேளயும் அதுக தம்பியயும் வச்சுத் தீனி போட முடியாம தினறிட்டு வாறான். இனிமே எங்க அய்யா கோமனத்த வித்து தாமுலே இதுகளுக்கு இரையறுக்கனும், வேற எங்கிட்ட எதுவும் இல்லன்னு ஒரு நாள் ரொம்ப சோகமா சொன்னான்.

கீத்தாவ தெனமும் எப்படியாவது பாத்துரனும்னு முல்லா அவ வீட்டு வழியா நடந்து போய் பாத்தான். ஆனா அவன யாரும் கண்டுக்கல. கீத்தாவ எப்படியாவது வீட்ட விட்டு வெளிய வர வக்கனுமின்னு நெனச்ச முல்லா அதுக்கு ஒரு திட்டம் போட்டான். நாய் மாரியே ஊள விட்டுட்டு அவ வீட்ட எட்டி எட்டி பாத்துகிட்டே போனான், இதுல கீழ கெடந்த வெறி நாய முல்லா கவனிக்கவே இல்ல. நாய் வயித்த முல்லா மிதிக்கவும் தூங்கிட்டு இருந்த நாய் வெறில முல்லாவோட தொடக்கறிய ஒரு கவ்வு கவ்வுச்சு. அவ்வளவு தான் முல்லா கத்தி கூப்பாடு போட்டுகிட்டே ஒடினான். கள்ளப் பய தான் ஒடுதான்னு நாய் விடாம முல்லாவ தொரத்த, கீத்தா வீட்டுல எல்லாரும் வெளில ஓடியாந்து வேடிக்க பாத்ததுக. தொப்புள சுத்தி 48 ஊசி போட்டாலும் முல்லா ரொம்ப தெனாவெட்டா எல்லார்ட்டயும், "எப்பிடி, நம்மாள வெளிய வர வச்சுட்டன்ல" அப்டின்னு சொல்லிட்டுத் திரிஞ்சான். எற்கனவே ராச நடை நடந்துட்டு இருந்த முல்லா பய நாய்கடிச்சதுக்கப்புறம் இன்னும் கொஞ்சம் கோயான் மாதிரி நடக்க ஆரம்பிச்சான்.

முல்லா இன்னும் வருவான்.....

2 comments:

அனுசுயா said...

அய்யோ பாவம் முல்லா :(

நெல்லைக் கிறுக்கன் said...

ரொம்ப நன்றிம்மோ. முல்லாப் பய பாவம்னு நெனக்காதிய. அவன் லேசுப்பட்டவன் கெடயாது...