Friday, June 02, 2006

முல்லா குல்லா... பாகம் 3

முல்லா அவன் படிச்ச பழைய தனியார் பள்ளியூடத்தில ஒரு பிள்ளைய ரெண்டு தலயா(ஏன்னா முல்லாக்கு தலயில ரெட்டச் சுழி)காதலிச்சான். அவன் லவ்வினது அந்த தனியார் பள்ளியூட எட்மிஸ்டரஸ் பிள்ளைய. அந்த எட்மிஸ்டரஸ் பேரு உமா மேடம். உமா மேடத்துக்கு 45 வயசு இருக்கும். ஆனா நேர்ல பாத்தா 30 வயசு அக்கா மாதிரி இந்திக்காரி நடிக தபு சாடைல இருக்கும். ஆனா அந்தம்மா புருசன் பாலாமடை பலராமனுக்கு மேடத்தோட 12 வயசு அதிகம். சைனாக்காரனுக்கு பொறந்த பயன்னு ஊருக்குள்ள அந்த ஆள பத்தி பாசமா சொல்லுவாக. பழய சினிமா நடிகரு குலதெய்வம் இராசகோபால் தம்பி மாதிரி இருப்பாரு மனுசன். விதி கொஞ்சங்கூட மனசாட்சியே இல்லாம சதி செஞ்சு ரெண்டு பேரயும் சோடி சேத்துருச்சு.

ஊருல நேரம் போகாம வத்தல், வடகம் போட்டுட்டு இருந்த மாமிகளா சேந்து ஆரம்பிச்ச பள்ளியூடம் தான் அந்த தனியார் பள்ளியூடம். உமா மேடத்துக்கு ஊர்ல உள்ள பெரிய புள்ளிகளோட நல்ல பழக்கம் இருந்ததால பள்ளியூடம் நல்லா வளந்துச்சு. பள்ளியூடம் வளர, வளர உமா மேடம் பழய வத்தல், வடக மாமி கூட்டத்த எல்லாம் வெரட்டிட்டு புதுசா, இளசா உள்ள பெரிய படிப்பு படிச்ச டீச்சர்களா புடிச்சு போட்டுச்சு. இதனால நெறய மாப்பிள பெஞ்சு பயலுவ ஒரு கிளாசுல 3, 4 வருசம் உக்காந்திருந்து பெஞ்ச தேச்சிட்டு இருந்தானுவ.

உமா மேடத்துக்கு ரெண்டு பொட்டப் பிள்ளேள். அதுக பேரு சீத்தா, கீத்தா. என்னடா பேரு சீதா, கீதான்னு தான இருக்கும் சீத்தா, கீத்தானு ஆத்தா மாதிரி இருக்கேனு முழிக்காதிய. அவுக அய்யா "பாலாமடை பலராமன்" பெயரியல் ஆசான் கி.கூ.முர்கேஸ்அன்(முருகேசன் தான் பெயரியல் படி அப்படி எழுதிருக்காரு) கிட்ட சொல்லி பெயரியல் ராசிப்படி அப்படி வச்சிட்டாரு. சீத்தாவும், கீத்தாவும் அவுக ஆத்தாவோட ரோட்டுல நடந்து வந்தா ஊர்ல உள்ள பயக்க சொரிமுத்து, அந்தோனி, பால்பாண்டி, செல்லத்துரை எல்லாம் வா பொளந்து பாத்துட்டு இருப்பானுவ. நடந்து வார மூனு பேருல யாரு அக்கா, யாரு தங்கச்சின்னே தெரியாம முழிப்பானுவ.

அந்த ஊருல ஜீன்சு பேன்ட்டு போட்டுட்டு முத முதலா திரிஞ்சது சீத்தா, கீத்தா தான். அந்த டிரசுல அதுகள பாத்ததும் முல்லாவோட சேக்காளி இசக்கியப்பனுக்கு ஒரு சந்தேகம் வந்துது. "எலே முல்லா இந்த பிள்ளேள் இந்த டிரச போடுதுகளே, ஏதாவது ஒரு அவசரம்னா என்ன செய்யும்?". அந்த கேள்விக்கு யாராலயும் பதில் சொல்ல முடியல....!!!

நம்ம முல்லா டாவடிக்கிறது சின்னவ கீத்தாவ. கீத்தா முல்லாவோட ஒன்னரை அடி உயரம் அதிகம். இருந்தாலும் ஆசை யார விட்டது. யாராவது கேட்டா "மூர்த்தி சிறுசா இருந்தா என்ன கீர்த்தி பெருசா இருக்குல்ல"ன்னு சொல்லுவான். முல்லா கீத்தா வீட்டுக்கு அடிக்கடி ஃபோன் போட்டு யார் எடுத்தாலும், "உம் நாந்தான்" அப்டின்னு மூனு தடவை சொல்லுவான். அதுக்கு "ஏல நீ என்ன பெரிய லார்டு கிச்சனா பேரச் சொல்லுல"னு பதில் வரும், முல்லாவும் விடாம "கரையிருப்பு லாரி செட்டா", "கரையிருப்பு லாரி செட்டா"னு மூனு தடவை கேட்டுட்டு ஃபோன வச்சிடுவான்.

முல்லா அடுத்த வாரம் வருவான்....

6 comments:

அனுசுயா said...

நெல்லை பாஷைல நல்லா எழுதறீங்க. போன வாரம் ஒரு நண்பர் மாப்ள பெஞ்சுனு சொன்னப்ப ஒன்னும் புரியாம முழுச்சேன். இப்பதான் தெரியுது அதுக்கு அர்த்தம்.

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி அனுசுயா.
நான் கூட கொஞ்ச நாள் மாப்ள பெஞ்சுல உக்காந்துருக்கேன்.

thirunelveli said...

சாமி சூப்பர்

நெல்லைக் கிறுக்கன் said...

நன்றி nellaitamil நண்பா...

Anonymous said...

I love your website. It has a lot of great pictures and is very informative.
»

Anonymous said...

Hey what a great site keep up the work its excellent.
»