முல்லா அப்படிங்கிற பேரப் பாத்ததும் ஏதோ சரித்திர கத சொல்லுதேன்னு நினைக்காதிய. முல்லா என் கூட படிச்ச ஒரு உத்தம புத்திரன். அவன் இப்போ எங்க என்ன பண்ணிட்டு இருக்கானோ தெரியல. நம்ம பயலுவ எல்லாம் அவன வல வீசி தேடிட்டு இருக்கானுவ. பய கையில சிக்க மாட்டக்கான்.
முல்லாவோட அங்க அடயாளம்:
உயரம்: 5 அடி
எட: 74 கிலோ
நெறம்: மஞ்சக் காமாள வந்தவன் மாதிரி மஞ்சள்
ஊரு: திருநெல்வேலி பக்கத்துல
முல்லாப் பயல் நடந்து வந்தான்னா அழுற சின்னப் பிள்ளேள் கூட அழுதத நிறுத்திட்டு மிரண்டு போய் பாக்கும், அப்படி ஒரு ராஜ நட...
அவனோட வாகணம் ஒரு 1972-ம் வருசத்து Lamby ஸ்கூட்டரு. அவங்க அய்யா அத எங்கியோ கொண்டி போட்டு வாங்கிக் கொடுத்தாரு. அந்த ஸ்கூட்டர ஒரு மூனு மாசமா முல்லா 1st கியர்லயே ஓட்டினான். வேற யாரு கிட்டயும் கேக்காம அவனாவே ஸ்கூட்டரு ஓட்ட ஆரம்பிச்சதால அந்த 1st கியர் எபெக்ட். ஸ்கூட்டருல இன்னும் மூனு கியர் இருக்கு, அதயும் உபயோகப் படுத்தனும்னு யாரும் அவனுக்கு சொல்லல அவனும் யார்கிட்டயும் கேக்கல. பொதுவாவே முல்லா தான் நினைக்கிறது தான் சரின்னு நினைப்பான் அதனால யார்ட்டயும் யோசன கேக்க மாட்டான்.
இப்படி 1st கியர்லயே போய் நெறய பெட்ரோல் செலவு ஆவுதுன்னு அவங்க அய்யா, "இனிமேல் ஸ்கூட்டர தொட்டீன்னா கைய ஒடிச்சு அடுப்புல வச்சி போடுவேன்னு" சொல்லிட்டாரு. அதனால முல்லா கொஞ்ச நாள் சோகமாத் திரிஞ்சான். அப்புறம் அவனோட சேக்காளி(நண்பன்) மகுடி மஸ்தான்(மஸ்தானப் பத்தி தனிக் கதை நெல்லைக் கிறுக்கன்ல வரும்) கிட்ட அவன் பிரச்சனைய சொல்லிருக்கான். அதுக்கு மஸ்தான் " எலெ கூமுட்டக் கூனா வண்டில மத்த கியரெல்லாம் மயிரப் புடுங்கதுக்கா வச்சிருக்க? அதயும் போடு அப்போ தான் ஸ்கூட்டரு நல்ல ஓடும்"னு சொல்லிருக்கான்.
அப்புறம் தான் முல்லா எல்லா கியரயும் போட்டு வண்டி ஓட்ட ஆரம்பிச்சான். அதுல இருந்து முல்லாவோட வண்டி பேரு குதிரன்னனு ஆகிப் போச்சு. முல்லா முதல்ல ரெண்டு தெருக்குள்ள அவன் குதிரயில சுத்திட்டு இருந்தான், அப்புறம் கொஞ்சம் தைரியம் வந்து திருநெல்வேலி சங்சன் வர போக அரம்பிச்சுட்டான்.
முல்லா அடுத்த வாரம் வருவான்.....
2 comments:
Yeda enna ore polanthu polanthu kattirukka. Itha mattum mullah pathan avlothan...
Enakku innaikki than magudi masthan yaarunnu therinjathu. Nalla interesting thande irukku. Summa vidama eluthu padichi than pappome.
Hey what a great site keep up the work its excellent.
»
Post a Comment